September 3, 2015

திரு­கோ­ண­மலை கீராண்டகுளத்தை புன­ர­மைத்துத் தரு­மாறு அப்­ப­குதி விவ­சா­யிகள் வேண்­டுகோள்!

திரு­கோ­ண­மலை பள்­ளிக்­கு­டி­யி­ருப்பு கீராண்டகுளத்தை புன­ர­மைத்துத் தரு­மாறு அப்­ப­குதி விவ­சா­யிகள் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர். மூதூர் பிர­தேச செய­ல­கத்­துக்கு உட்­பட்ட பள்­ளிக்­கு­டி­யி­ருப்பு கீராண்­ட­குளம் நீண்­ட­கா­ல­மாக
செப்­ப­னி­டப்­ப­டாமல் கவ­னிப்­பா­ரற்றுக் கிடக்­கின்­றது என கஜ­முகன் விவ­சாய சம்­மே­ள­னத்தின் பொதுச் செய­லாளர் சர­வ­ண­முத்து முதல்வன் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்தக் குளம் தோப்பூர் கம­நல சேவைகள் திணைக்­க­ளத்­துக்கு உட்­பட்­ட­தாகும். சுமார் 650 ஏக்கர் விவ­சாய நிலங்­க­ளுக்கு நீரைத் தேக்கி வைக்கக் கூடிய இந்தக் குளம் கடந்த 10 வரு­டங்­க­ளுக்கு மேலாக கவ­னிப்­பா­ரற்று காணப்­ப­டு­வ­துடன் நீரை தேக்கி வைக்க முடி­யா­த­வாறு மதகு வான்­க­த­வுகள் குளக்­கட்டு என்­பன சேத­ம­டைந்தும் காண­ப்­படு­கின்­றன.
இக்­கு­ளத்து நீரை நம்பி சுமார் 700 குடும்பங்கள் விவ­சாயச் செய்­கையில் ஈடு­பட்­டுள்­ளன. இது தொடர்­பாக தாம் பல்­வேறு தரப்­பி­ன­ருக்கும் அறி­வித்­துள்ள போதும் இது­வரை எவ்­வித பயனும் கிடைக்­க­வில்லை. எனவே கவ­னிப்­பா­ரற்றுக் கைவி­டப்­பட்டுக் கிடக்கும் கீராண்­ட­கு­ளத்தை திருத்­தி­ய­மைத்து தமது ஜீவ­னோ­பாய தொழிலை மேற்­கொள்ள உத­வு­மாறும் அவர் வேண்­டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment