September 30, 2015

14 மற்றும் 15 வயது மகள்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாரை ஆலையடிவேம்பு பிரதேச பிரிவிலுள்ள புளியம்பத்தை கிராமத்தில் இரு சிறு பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 31 வயதுடைய தந்தை ஒருவரை பொதுமக்கள் நய்புடைப்பு செய்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று(30) புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்

இதுபற்றி தெரியவருவதாவது மீள்குடியேற்ற கிராமமான புளியம்பத்தை கிராமத்திலுள்ள குறித்த 14 வயது 15 வயது பிள்ளைகளின்; சகோதரனுக்கு சுகயீனம் காரணமாக தாயார் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இரு பெண் பிள்ளைகளும் தனிமையில் இருந்த நிலையில் தந்தையால் சம்பவதினமான புதன்கிழமை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அயலவர்களுக்கு தெரியவந்ததையடுத்து தந்தையாரை இரவு கிராமத்து பொதுமக்கள் பிடித்து நய்புடைப்பு செய்த பின்னர் பொலிசாரிடம் ஓப்படைத்தனர்
இதனையடுத்து பொலிசார் அவரை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதேவேளை குறித்த தந்தை பாதிக்கப்பட்ட ஒரு மகளை கடந்த 6 வருடங்களுக்க முன்னர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள நிலையில் அவ் சிறுமியை சிறுவர் இல்லம் ஒன்றில் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றினால் சேர்க்கப்பட்டு அங்கு இருந்து வந்த நிலையில் மீண்டும் தாயாருடன் இருந்துவரும் நிலையிலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நாளை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

No comments:

Post a Comment