August 20, 2015

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் மஹிந்தவை ஆஜர் செய்ய வேண்டும்!- ஆஸ்திரேலிய செனட் சபை உறுப்பினர்.!

மஹிந்த ராஜபக்‌ஷவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஆஜர் செய்ய வேண்டும்” என்று ஆஸ்திரேலிய செனட் சபை உறுப்பினர் லீ ரியன்னன் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல்களின் பின்னர் அவர் தனது டுவிட்டரில் இந்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
தேர்தலில் அடைந்த தோல்வியானது, மஹிந்த மற்றும் அவரது சகோதரர்களை ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் போர்க்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முற்படுத்தக்கூடிய சந்தர்ப்பத்தை அதிகரித்துள்ளது என்றும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment