July 11, 2015

முன்னாள் கைதிகள் புலனாய்வுப் பிரிவினரால் கண்காணிப்பு!

விடுதலையாகிச் செல்லும் கைதிகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிப்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர்.சிறைச்சாலைகளிலிருந்து விடுதலை செய்யப்படும் கைதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்
.
தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக மாறி இவ்வாறான கைதிகள் குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடுமென குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல்வாதிகளுக்காக குற்றச் செயல்களில் ஈடுபட்டு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறைக்குச் செல்ல இந்தக் கைதிகள் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, இவ்வாறு விடுதலை செய்யப்படும் கைதிகளை பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள் கண்காணித்து வருவதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment