July 11, 2015

யாழில் தனது கணவனின் வீட்டின் முன்பாக நின்று தீமூட்டி தற்கொலைக்கு முயன்ற யுவதியால் பரபரப்பு!

தனது கணவனின் வீட்டின் முன்பாக நின்று தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டி தற்கொலைக்கு முயன்ற யுவதியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இந்த சம்பவம்
நடந்துள்ளது. இலங்கை பொலிசில் கொன்ஸ்டபிளாக கடமையாற்றும் அச்சுவேலி யுவதியொருவரே இந்த விபரீத காரியத்தை செய்துள்ளார்.
வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பைரவி (வயது 26) என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பொலிஸில் பணியாற்றும் இந்த யுவதி, நீதிமன்றத்தில் கடமையாற்றும் நபர் ஒருவரை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பில், நேற்று வெள்ளிக்கிழமை தான் பதிவு திருமணம் செய்து கொண்ட நபரின் வீட்டிற்கு சென்றபோது ஏற்பட்ட தகராறில், குறித்த பெண் கான்ஸ்டபிள் குறித்த நபரின் வீட்டிற்கு முன்பாக நின்று தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
படுகாயங்களுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் தற்போது யாழ். போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணையினை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment