July 11, 2015

தமிழ் மக்கள் காணிப் பிரச்சினை தீர்க்கப்படும் ரணில்!

வடமாகாண மக்கள் முகம் கொடுத்துள்ள காணிப் பிரச்சினை புதிய அரசாங்கத்தின் கீழ் தீர்க்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.


நீண்டகாலமாக தமிழ் மக்கள் காணிப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இந்த விடயம் சம்மந்தமாக புதிய அரசாங்கம் ஆட்சியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்படும்.

அத்துடன் வடக்கில இடம்பெறுகின்ற துஸ்பிரயோக சம்பவங்களுக்கும் நீதிக்காணப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment