June 7, 2015

தென்மராட்சியினில் எரியுண்ட நிலையினில் சடலம்!

தென்மராட்சியின் மட்டுவில் இல்வாரைக் குளம் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டுவில் இல்வாரைக் குளத்துக்கு அருகில் உள்ள பற்றைக்காணியில் எரிந்த நிலையில் இருந்த
இந்தச் சடலத்தை கண்ட பொதுமக்கள் இன்று சனிக்கிழமை காலை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

கல்வயலைச் சேர்ந்த சதாசிவம் சபாரட்ணம் (வயது 58) என்பவரின் சடலமே இதுவென அடையாளம் காணப்பட்டுள்ளது.இதையடுத்து அந்த இடத்துக்கு வந்த  இலங்கைப்பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தையும் மீட்டெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment