May 14, 2015

தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு யேர்மனியின் தலைநகரத்தில் நடைபெற்ற பதாதை கவனயீர்ப்பு!

தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு பேர்லின் நகரினில் தமிழ் மக்களுக்கு நடந்த / நடக்கின்ற இன அழிப்புக்கு நீதி கோரும் முகமாக பதாதை கவனயீர்ப்பு நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது . இவ் நிகழ்வில் தமிழ் இளையோர்களால் பல்லின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் பாரிய பதாதையை தாங்கிய வண்ணம் துண்டுப்பிரசுரங்கள் யேர்மன் மொழியில் வழங்கப்பட்டது .

நகர மத்தியில் அதிகமாக மக்கள் நடமாடும் பகுதியில் இவ் நிகழ்வு நடைபெற்றது . திடீர் என வீதியில் இறங்கி இக் கவனயீர்ப்பு நடைபெற்ற காரணத்தால் மக்கள் மத்தியில் இவ் விடையம் அதிகமான கவனத்தை பெற்றுக்கொண்டது .




No comments:

Post a Comment