May 7, 2015

வாகனம் வருமா? வராதா? கோண்டாவில் டிப்போ வாகனத்தைத் திருப்பிக் கொடுக்காத அஸ்வர்!

இலங்கை போக்குவரத்துசபை, கோண்டாவில் சாலையின் முன்னாள் பிராந்திய பிரதம முகாமையாளராக கடமையாற்றிய அஸ்கர், தனக்கு வழங்கப்பட்ட அலுவலகப்பாவனை வாகனத்தை திரும்ப ஒப்படைக்கவில்லையென கூறப்படுகிறது.


நிதிமோசடிக் குற்றச்சாட்டுக்களிற்கு உள்ளாகியிருந்த அஸ்கர் திடீரென இடமாற்றம் பெற்று, கொழும்பு தலைமையலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

புதிய பிரதம பிராந்திய முகாமையாளராக கேதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.அஸ்கர் இடமாற்றம் பெற்று சென்று ஒருமாதமாகியும், இன்னும் தனக்கு வழங்கப்பட்ட வாகனத்தை திரும்ப ஒப்படைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ஆவணங்கள் மற்றும் அலுவலகப்பாவனைக்கான சிம் அட்டை என்பவற்றையும் ஒப்படைக்காமல் இழுத்தடிப்பு செய்து வருகிறார்.

இதுபற்றி உரிய அதிகாரிகளிற்கு அறிவிக்கப்பட்டபோதும், இதற்கு இன்னும் தீர்வுகிடைக்கவில்லையென கோண்டாவில்சாலை அதிகாரியொருவர் தீபத்திற்கு தகவல் தந்துள்ளார்.

No comments:

Post a Comment