May 26, 2015

யாழ். சுன்னாகத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்ற தடை!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளை நடத்த நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
மல்லாகம் நீதிமன்றத்தில் பொலிஸார் தாக்கல் செய்த முறைப்பாட்டின் பேரில் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த தடை அமுலில் இருக்கும்.
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சம்பவத்தை கண்டித்து இன்று குறித்த பகுதியில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment