April 6, 2015

மட்டக்களப்பு - கிரான் வாவியில் இறந்து கரையொதுங்கும் மீன்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் வாவியில் கடந்த சில தினங்களாக பெரும் எண்ணிக்கையிலான மீன்கள் இறந்து கரையொதுங்குவதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.


கிரான், தோணிமடு, கும்புறுமூலை மற்றும் கிண்ணையடி வரையிலான சுமார் ஏழு கிலோ மீற்றர் வாவியில் மீன்கள் இறந்து கரையொதுங்கிவருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் வாவியில் கடந்த சில தினங்களாக பெரும் எண்ணிக்கையிலான மீன்கள் இறந்து கரையொதுங்குவதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

கிரான், தோணிமடு, கும்புறுமூலை மற்றும் கிண்ணையடி வரையிலான சுமார் ஏழு கிலோ மீற்றர் வாவியில் மீன்கள் இறந்து கரையொதுங்கிவருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

விலாங்கு, சள்ளல், ஐதல், முரலி, திரளி, கெழுத்தி மற்றும் சிலிந்தல் போன்ற மீன் இனங்கள் இறந்து கரையொதுங்குவதனால் வாவியோரம் துர்வாடை வீசத் தொடங்கியுள்ளதால் பிரதேச வாசிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கடல் தொழில் நீரியல்வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஏ.ஏ பரீட் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், மீனவர்கள் தெரிவித்த தகவலின்படி வாவியோரங்களில் பெரும் எண்ணிக்கையிலான மீன்கள் இறந்து கரையோதுங்கியுள்ளதை அவதானிக்கமுடிகிறது இதற்கான காரணத்தை உடனடியாக உறுதிப்படுத்த முடியாதுள்ளது.

இறந்த மீன்கள் மற்றும் வாவி நீர் ஆகிவற்றின் மாதிரிகளை எடுத்து நாரா நிறுவனத்திற்கு பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்காக அனுப்பியுள்ளோம். அறிக்கை கிடைத்த பின்னரே மீன்கள் இறந்தமைக்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியும் என்றார்.

No comments:

Post a Comment