April 6, 2015

யாழ்.துன்னாலை தக்குச்சம்பாட்டி பகுதியில்  கசிப்பு விற்பனை செய்த நால்வர் கைது !

யாழ்.துன்னாலை தக்குச்சம்பாட்டி பகுதியில் கசிப்பு விற்பனை செய்த 4 சந்தேகநபர்களை திங்கட்கிழமை (06) கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர்களிடமிருந்து 10 போத்தல் கசிப்பு கைப்பற்றப்பட்டது.

அப்பகுதி மக்கள் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில், விற்பனை செய்த பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் குறித்த நால்வரையும் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment