March 4, 2015

வட்டுக்கோட்டையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவர் கைது!

வட்டுக்கோட்டையில் குடாத்தனைப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்று தண்டப்பணம் அறவிட்டுள்ளது.

மூவரில் ஒருவர் தனது குற்றத்தினை ஒப்புக் கொள்ள மறுத்த நிலையில் 70 ஆயிரம் ரூபா ஆட்பிணையில் செல்ல உத்தரவிட்ட மல்லாகம் நீதவான் மற்றைய சந்தேக நபர் இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.
நேற்றைய முன் தினம் கசிப்புக் காச்சிய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர்கள் மூவரையும் வட்டுக் கோட்டைப் பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றில் உட்படுத்தியிருந்தனர். அத்துடன் கைப்பற்றப்பட்ட 3 போத்தல் கசிப்பு அத்துடன் கசிப்புக் காச்சப் பயன்படுத்திய பொருட்களையும் சான்றுப்படுத்தியிருந்தனர்.

No comments:

Post a Comment