March 5, 2015

இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதே எனது நிலைப்பாடு ஜெனரல் சரத் பொன்சேகா!!

சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதே எனது நிலைப்பாடு. ஆனாலும், குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் போது, அதனை விசாரிக்காமல், குற்றச்சாட்டை நிராகரிப்பது தவறு. இரண்டு இலட்சத்துக்கும்
அதிகமான படையினரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தில் ஒரு சிலர் குற்றங்களை புரிந்திருந்தால், அதனை விசாரித்து அவர்களை தண்டிப்பது அவசியம்.
அனைத்துலக அழுத்தங்கள் காரணமாகவே உள்நாட்டு விசாரணைக்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளதாக கூறப்படுவது தவறு. இதற்கு முன்னரும், குற்றச்சாட்டுக்கள் வந்தபோது பொது விசாரணைகள் நடந்திருக்கிறது. இராணுவத்தினருக்கு எதிரான எந்த விசாரணையையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

No comments:

Post a Comment