September 14, 2014

பருத்தித்துறையில் மற்றொரு ஆணின் சடலம்!

பருத்தித்துறை முனைப்பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க மேலுமொரு ஆணின் சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது. எனினும் குறித்த சடலமும் யாருடையது என
இனங்காணப்படவில்லை. ஏற்கனவே தீவகத்தின் மண்கும்பானில் சடலமொன்று கரை ஒதுங்கியிருந்த நிலையில் இச்சடலம் தற்போது கரை ஒதுங்கியுள்ளது.இருப்பினும் இந்திய மீனவர்கள் மூவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என இந்திய வட்டாரங்கள்  செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளது. அதனையடுத்து இந்திய மீனவர்களது சடலமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நேற்று முன்தினம்  மண்கும்பான் கடற்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியிருந்த  போதும் அது இது வரை உரிமை கோரப்பட்டிருக்கவில்லை.

No comments:

Post a Comment