August 16, 2014

ஆமிக்கு போன தமிழ்பெண் சடலமாக திரும்பினார்!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியிலிருந்து இராணுவத்தில் அண்மையில் இணைந்து கொண்ட குடும்ப பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான
வகையில் உயிரிழந்துள்ளார்.எனினும் நோய்வாய்ப்பட்டே இறந்ததாக காரணம் கூறப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஓட்டுசுட்டான் செல்வபுரத்தில் பிறந்த பிரசாத் அஜந்தா (வயது 22)என்பவரே இவ்வாறு சடலமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.கடந்த மே மாதம் 22 ம் திகதி இவர் இராணுவத்தில் இணைந்துள்ளார். குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் பலாலியினில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தவேளை சுகவீனமுற்றதாக கூறி யாழ்.போதனாவைத்தியசாலையினில்; அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது. 6 வயதேயான ஓரு பெண் குழந்தையின் தாய் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த பெண்ணின் சடலம் இராணுவத்தினரால் அவசர அவசரமாக எடுத்து செல்லப்பட்டு பொன்னகர் இந்து மயாணத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.


முல்லைதீவு மாவட்டத்தினில் இலங்கை இராணுவ ஆட்சேர்ப்பில் 39 வரையான பெண்கள் மட்டும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.Tamil-Lady-MullaiTamil-Lady-Mullai-01

No comments:

Post a Comment