August 9, 2014

தமிழகத்தில் இலங்கை ஏதிலி தூக்கு போட்டு தற்கொலை!

தமிழகத்தில்  தனியார் மில்லில் சாரதியாக பணியாற்றி வந்த இலங்கை  ஏதிலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இலங்கையில் இருந்து  ஏதிலியாக கோவை வந்தவர் கார்த்திக், சவுரிபாளையம் வேளாங்கண்ணி நகரில் விஜயகுமார் என்பவர் வீட்டில் வசித்து வந்தார்.

ராதிகா என்ற பெண்ணை கார்த்திக் திருமணம் செய்தார்.

இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

கோவையில் உள்ள தனியார் மில்லில் சாரதியாகபணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திக், மின் விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பீளமேடு பொலிஸார், விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment