May 4, 2014

யாழ் கொடிகாமத்தில் வாள் வெட்டு இளைஞன் படுகாயம்!

யாழ் கொடிகாமம் கச்சாய் வீதியில் நேற்று இரவு 12 பேர் கொண்ட கும்பலினால்
மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளான்.
இச்சம்பவத்தில் கச்சாய்ப் பகுதியினைச் சேர்ந்த உதயகுமாரன் குமாரன் (24) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
மேற்படி இளைஞர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment