May 4, 2014

யாழில் வாள்வெட்டு ஒரேகுடும்பத்தை சோ்ந்த மூவர் படுகொலை!

யாழ்.அச்சுவேலி பிரதேசத்தில் இன்று அதிகாலை வேளை ஒரு குடும்பத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர வாள் வெட்டுச் சம்பவத்தில் அக் குடும்பத்தை சேர்ந்த
மூவர். பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது.
அச்சுவேலி J /212 கதிரிப்பா கிராமசேவையாளர் பிரிவில் இருந்த ஒரு வீட்டுக்குள் இன்று அதிகாலை 12.30 மணியளவில் உட்புகுந்த இனந்தெரியாத குழுவினர் வீட்டில் இருந்தவர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளனர்.
இக்கொடூர சம்பவத்தில் அந்தக் குடும்பத்தை சேர்ந்த தாய் ,மகன், மற்றும் மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிழந்துள்ளதுடன் அக் குடும்பத்தை சேர்ந்த மருமகன் மற்றும் மற்றுமொரு மகளும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் நிற்குணானந்தன் அருள்நாயகி (வயது 50) நிற்குணானந்தன் சுபாங்கன் (வயது 19) யசோதரன் மதுஷா (வயது 27) என்பவர்களே உயிரழந்தவர்கள் ஆவார்கள். மற்றும் யசோதரன் (வயது 30) தர்மிகா (வயது 25) என்போரே படுகாயமடைந்தோர் ஆவார்கள்.
உயிரிழந்த மதுஷாவும் யசோதரனும் கடந்த ஒரு கிழமைக்கு முன்னரே திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காயமடைந்த தர்மிகா இரண்டு பிள்ளையின் தாயாருமாவார் கணவனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அவரை விட்டுப்பிரிந்து பிள்ளையுடன் தனது தாய் வீட்டில் சகோதரர்களுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களது வீட்டுக்கு வந்த தர்மிகாவின் கணவர் வீட்டில் இருந்தவர்களுடன் முரண்பட்டதுடன் உங்கள் அனைவரையும் வெட்டுவேன் என கூறிச்சென்றதாகவும் அதன் பின்னரே இச் சம்பவம் நடைபெற்றுள்ளதால் தர்மிகாவின் கணவரே இக் கொலைகளை செய்திருக்கலாம் என அயலவர்களால் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை தர்மிகாவின் கணவர் வெளிநாடு செல்வதற்கு உரிய ஏற்பாடுகளை ஏற்கனவே செய்திருந்ததாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் அவர் வெளிநாடு பயணமாக தயாராக இருந்ததாகவும். எனவே இவர் இக்கொலைகளை செய்துவிட்டு வெளிநாடுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருந்திருக்கலாம் எனவும் அயலவர்கள் சந்தேகிக்கின்றனர்.

No comments:

Post a Comment