May 5, 2014

இவன்தான் அச்சுவேலியில் மூன்று கொலைகளைச் செய்த கொடூரன்

யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய தர்மிகாவின் கணவா்
தனஞ்செயன் இன்று மல்லாகம் நீதிமன்றில் ஆஜார் படுத்தப்பட்டார்.

குறித்த நபர் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் ஆஜார்படுத்தப்பட்டது. வழக்கை விசாரித்த மல்லாக நீதிமன்ற நீதிபதி குறித்த நபரை எதிர்வரும் மே மாதம் 16 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தர விட்டுள்ளார்.
இன்றைய தினம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தினை சூழ்ந்துள்ள பொது மக்கள் குறித்த கொலையாளியை பார்வையிடுவதற்கு சூழ்ந்துள்ளதுடன் அங்கிருந்து கோசங்களை எலுப்பி வந்த நிலையில் குறித்த நபரை இராணுவத்தின் துணையுடன் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அச்சுவேலியில் இக் கொலைகாரனைப் பொதுமக்கள் கொலைசெய்ய முயற்சித்துள்ளனா்.

No comments:

Post a Comment