April 26, 2014

ஏழுபேரின் வழக்கினை அரசியல் சாசனத்திற்கு மாற்றியமை ஏமாற்றத்தை அளிக்கிறது -பழ.நெடுமாறன்!

ராஜீவ் கொலை வழக்கை உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி இருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

அரசியல் அழுத்தத்திற்கு உச்சநீதிமன்றம் பணியுமானால் நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கை மக்களுக்கு போய்விடும் என உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி இருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் மூத்த நீதிபதிகளுடன் அமர்ந்து இந்த வழக்கை விசாரித்தார்.இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் போடப்பட்ட 2 மனுக்களில் ஒன்றில் தீர்ப்பு சொல்லி விட்டார்கள்.
அடுத்த மனு மீது தீர்ப்பு சொல்வதற்கு பதில் அதை அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்புவது என்று எடுத்த முடிவு அரசியல் அழுத்தத்தின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவாகவே கருதுகிறேன்.இத்தகைய அரசியல் அழுத்தத்திற்கு உச்சநீதி மன்றம் பணியுமானால் நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கை மக்களுக்கு போய்விடும்.
ஆகவே இந்த பிரச்சினையில் உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு சரியானது அல்ல.உச்சநீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறுகிறார். இந்த வழக்கில் ஒரு மனுவின் மீது தீர்ப்பு அளித்த அன்றே 2–வது மனு மீதும் தீர்ப்பு சொல்லி இருக்கலாம்.
ஆனால் அதை வேண்டும் என்றே ஒத்தி வைக்கப்பட்டு, ஓய்வு பெறும் நாளில் இத்தகைய தீர்ப்பு சொல்லி இருப்பது தவறானது.ஒவ்வொரு நீதிபதியின் மனநிலையை பொறுத்து தான் தீர்ப்பு என்றாகி விட்டது. இதனால் அடுத்து வரும் அமர்வில் எந்தெந்த நீதிபதிகள் பங்கேற்கிறார்கள். அவர்களில் மனநிலை என்ன? என்பதை பொறுத்து தான் இந்த வழக்கின் தீர்ப்பை பற்றி கருத்து சொல்ல முடியும் இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment