August 12, 2016

மகிந்தவின் ஒட்டுக்கேட்கும் மெசின் சிக்கியது?

மகிந்த ஆட்சியில் இருந்த காலகட்டத்தில், 150,000 ஆயிரம் அமெரிக்க டாலர் பெறுமதியான டெலிபோன் ஒட்டுக் கேட்க்கும் சாதனம் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார். இதனூடாகவே அவர் தென்னிலங்கையில் உள்ள அனைத்து முக்கிய புள்ளிகளின் டெலிபோன் உரையாடல்களையும் ஊடறுத்துக் கேட்டுள்ளார். “GSM ” ( டாப்பிங்) என்று அழைக்கப்படும் இச்சாதனம் மிகவும் விலை உயர்ந்தது.


இது மோபைல் போன் மற்றும் வீட்டு தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க்க உதவியாக இருக்கும். இதற்காக ஒரு குழுவை அமைத்து, அதற்கு தலைவராக கோட்டபாய ராஜபக்ஷவை நியமித்துள்ளார் மகிந்த.

அனைத்து டெலிபோன் உரையாடல்களையும் இவர்கள் பதிவுசெய்து. அவற்றுள் முக்கியமானவற்றை மகிந்த மற்றும் கோட்டபாயவுக்கு போட்டு காட்டியுள்ளார்கள்.

தற்போது தகவல் மற்றும் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஹரீன் பேர்னாண்டோ இதனை உறுதிசெய்துள்ளதோடு. குறித்த சாதனம் எங்கே இருக்கிறது என்பதனை பொலிசார் உதவியோடு கண்டறிந்துள்ளார். இலங்கை தொலைத் தொடர்பு நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டு இருந்த இச்சாதனம், மகிந்த தேர்தலில் தோற்றபோது இனந்தெரியாத நபர்களால் அங்கிருந்து அகற்றப்பட்டு பிறிதொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

அன்று முதல் இந்த சாதனம் எங்கே சென்றது என்று தெரியாமல் இலங்கை அதிகாரிகள் சிலர் இதனை தீவிரமாக தேடி வந்தார்கள்.

இன் நிலையில் தான் குறித்த சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எங்கிருந்து இதனைப் பெற்றார்களோ. அந்த நாட்டிற்கே இதனை திருப்பி அனுப்பி. பணத்தை மீளப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹரீன் தெரிவித்துள்ளார். ஆனால் மிகவும் சூட்சுமாக எந்த நாடு என்பதனை அவர் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அமெரிக்கா , அல்லது இந்தியா இந்த சாதனத்தை வழங்கி இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment