August 12, 2016

இலங்கைக்கு கடத்தவிருந்த அரியவகை கடலட்டை இராமேஸ்வரத்தில் மீட்பு!

இராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை உயிருடன் பறிமுதல் செய்த மண்டபம் கடலோர காவல்படை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மண்டபம் மற்றும் வேதாளைப்பகுதிகளில் அரியவகை கடல் அட்டைகள் கடத்தப்பட்டு வருவதாக கடலோர கவல்படை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மன்னார் வளைகுடா கடலோரப் பகுதிகளில் கடலோர கவல்படை பொலிஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது மண்டபம் கடற்கரை வீதியில் வாகன சோதனையில் சந்தேகத்திற்க்கு இடமான ஆட்டோ ஒன்று பிடிப்பட்டது அந்த ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 300 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை உயிருடன் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment