August 3, 2016

புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுதனை அவுஸ்திரேலியா அங்கீகரிக்கின்றது!

புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுதனை அவுஸ்திரேலியா அங்கீகரிக்கின்றது, புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுவதனை அவுஸ்திரேலியா அங்கீகரிக்கின்றது என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.


சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் ஆகிய அமைப்புக்கள் இவ்வாறு அவுஸ்திரேலியாவின் நடவடிக்கைகளை கண்டித்துள்ளன.

அவுஸ்திரேலிய அரசாங்கம் வேண்டுமென்றே புகலிடக் கோரிக்கையாளர் துன்புறுத்தப்படுவதனை அங்கீகரிக்கும் கொள்கைகளை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

படகு மூலம் அவுஸ்திரேலியாவை அடையும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நவுரு மற்றும் பபுவா நியூகினி தீவுகளில் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைவதனை தடுக்கும் நோக்கில் அனைத்து திட்டங்களையும் அவுஸ்திரேலியா வகுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.

புகலிடக் கோரிக்கையாளர் முகாம்களில் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment