July 19, 2016

அம்பாறை திருக்கோவிலில் கஞ்சாவுடன் மூன்று பேர் கைது!

அம்பாறை திருக்கோவில் காவற்துறை பிரிவிற்குட்;பட்ட விநாயகபுரம் 4 ஆம் பிரிவில் சுமார் 450 கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக திருக்கோவில் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் காவற்துறையினரின் விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment