July 14, 2016

ஒரு குழந்தையின் தாய் கூட்டு பாலியல் வன்புணர்வு!

அவிசாவளை, கரதன, நான்காம் தூண் பிரதேசத்தில் 26 வயதுடைய ஒரு குழந்தையின் தாய் ஒருவரே கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.


சில வருடங்களுக்கு முன்னர் அவரின் கணவர் விட்டுச்சென்ற நிலையில், குறித்த பெண்ணின் சகோதரி வீட்டில் தனது குழந்தையுடன் வசிந்து வந்துள்ளாள்.

குறித்த யுவதி தனது 6 மாத குழந்தையுடன் வீட்டியில் தனியாக இருந்த சந்தர்ப்பத்தில் 5 காமுகர்களால் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த கொடூர சம்பவம் இடம்பெற்ற நாளில் பெண்ணின் சகோதாரியும் அவரது கணவரும் வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றைய சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment