July 19, 2016

பல்கலைக்கழக விவகாரம் புதிய பிரபாகரனை உருவாக்கும் திட்டம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவமானது புதிய பிரபாகரனை உருவாக்கும் ஒரு செயற்பாடு என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.


புத்தளத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் சிலர் இந்த பிரச்சினையை வேறு விதமாக சித்தரிக்க முயல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் யாழ். பல்கலைக்கழகத்தை ஈழ பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு ஒரு சிலருக்குதேவை ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு நினைப்பவர்களுக்கு இலங்கை அரசு ஒரு போதும் அனுமதியளிக்காது என்றும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment