July 19, 2016

வெற்றிச்செல்வியின் ஆறிப்போன காயங்களின் வலி!

முன்னாள் பெண் போராளியான வெற்றிச்செல்வியின் 'ஆறிப்போன காயங்களின் வலி' நூல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.


குறித்த நிகழ்வு கொழும்பு தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் இன்று (19) மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்புமுகாம் வாழ்வு தெடர்பான ஒரு வரலாற்றுப் பதிவாக இந்த நூல் வெளிவந்துள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 18 வருடங்கள் களச்சமர் புரிந்து ஒரு கையையும் ஒரு கண்ணையும் இழந்தும் மனம் தளராத வெற்றிச்செல்வி இதுவரை ஆறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment