July 19, 2016

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதலுக்கு ஹெல உறுமய கண்டனம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திற்கு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.


சிங்கள மாணவர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வு நடாத்த தமிழ் மாணர்கள் எதிர்த்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன் மூலம் சிங்கள மாணவர்களின் சம உரிமை இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


இலங்கையின் ஏனைய பகுதிகளின் பல்கலைக்கழங்களில் ஏனைய இன மத கலாச்சார நிகழ்வுகளை சிங்கள மாணவர்கள் எதிர்த்தது கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனவாத மதவாத அடிப்படையிலான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment