July 28, 2016

“நரிகள் மன்னர்கள் ஆன காலம் முடிந்து விட்டது” - பாத யாத்திரைக்கு எதிராக சுவரொட்டி

கூட்டு எதிர்க்கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கண்டியில் இருந்து இன்று ஆரம்பித்த பாத யாத்திரைக்கு எதிராக மாவனல்லை பிரதேசத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


“நரிகள் மன்னர்கள் ஆன காலம் முடிந்து விட்டது” முழு நாட்டையும் அருவருக்கச் செய்த ராஜபக்சவினர், இன்றும் வேண்டாம். நாளையும் வேண்டாம். எப்போதும் வேண்டாம் என அந்த சுவரொட்டியில் எழுதப்பட்டுள்ளது.

பாத யாத்திரை மீது கொண்டுள்ள அச்சம் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டு அரசாங்கம் இந்த சுவரொட்டியை ஒட்டியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment