July 17, 2016

எதிர்க்கட்சி தலைவர் மன்னார் ஆயர் இல்லத்திற்கு திடீர் விஜயம்!

மன்னாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் இன்று காலை மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.


எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் ஆயர் இல்லத்திற்குச் சென்றிருந்தார்.

முதலில் ஆயர் இல்லத்திற்குச் சென்ற எதிர்க் கட்சித்தலைவர் உள்ளிட்ட குழுவினர் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்சிலி சுவாமி பிள்ளை ஆண்டகை அவர்களை சந்தித்து உரையாடிதோடு ஆசிபெற்றுள்ளனர்.

பின்னர் ஓய்வு பெற்ற முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களையும் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இதன்போது திருகோணமலை மறை மாவட்ட ஆயர் றோயல் இம்மானுவேல் ஆயரின் செயலாளர் அருட்தந்தை முரளிதரன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment