June 22, 2016

சுண்டிக்குளத்தில் ஆயுத மீட்பு பணி தோல்வி!

கிளிநொச்சியில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட சுண்டிக் குளம் பகுதியில் நேற்றுமாலை முன்னெடுக்கப்பட்ட ஆயுத மீட்பு பணி தோல்வியில் முடிந்தது.
மக்கள் பயன்பாடு அற்ற காணியில் பெருமளவு ஆயுதங்கள் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குற்றத்தடுப்புப் பொலிஸார், தர்மபுரம் பொலிஸார் ஊடாக அந்த இடத்தைத் தோண்டுவதற்கான அனுமதியை கிளிநொச்சி நீதிமன்றத்தில் பெற்றனர்.

 
இதையடுத்து நேற்று மாலை ஆறு மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட தோண்டும் பணி ஆயுதங்கள் எதுவும் கிடைக்காமையினால் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

No comments:

Post a Comment