June 22, 2016

வவுனியா பிரபல வர்த்தகர் இனந்தெரியாத நபர்களால் கடத்தல்!

வவுனியா கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் நேற்று இரவு 7.15 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார்.


சண்முகம் செல்வராசா (வயது 55) என்ற வர்த்தகரே கடத்தப்பட்டவராவார். வவுனியாவிலிருந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இவர், தனது வீட்டு வாசலில் வைத்தே கடத்தப்பட்டுள்ளார். வாகனமொன்றில் வந்தவர்களால் இவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
கடத்தப்பட்ட வர்த்தகரின் குடும்பத்தார் கொழும்பில் வசித்து வருவதுடன், அவர் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.


No comments:

Post a Comment