June 22, 2016

இந்தோனேசியாவில் தத்தளித்து வரும் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவத் தயார் –ராமசாமி!

இந்தோனேசிய கடற்பரப்பில் தத்தளித்து வரும் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவத் தயார் என மலேசியாவின் பினாங் மாநில பிரதி முதலமைச்சர் பீ.ராமசாமி அறிவித்துள்ளார்.


அவுஸ்திரேலியா பயணிப்பதற்காக படகு மூலம் கடல் வழிப் பயணத்தை ஆரம்பித்த 44 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தோனேசிய கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்தனர்.

மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகலிடக் கோரிக்கையாளர்களை பார்வையிடுவதற்கு மத்திய அரசாங்கத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென ஆச்சே ஆளுனர் ஸியானி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய துணை ஜனாதிபதி மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆச்சே கடற் கரையில் கூடாரம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment