June 22, 2016

இறுதிப்போரில் கொலைக்களங்களாக மாறிய பாதுகாப்பு வலயங்கள்! - சிவமோகன் எம்.பி!

இறுதிக்கட்ட போரில் வன்னியில் அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலையங்கள் அனைத்தும் பொதுமக்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட கொலைக்களங்களாகவே மாறியிருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இந்தத் தகவலை தெரிவித்த சிவமோகன் இறுதி யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் அரச படையினராலும் கடந்தகால ஆட்சியாளர்களாலும் மேற்கொள்ளப்பட்ட கொடூரங்களை மூடி மறைக்க தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் முனைவதாகவும் குற்றம்சாட்டினார்.

 
நீதியை நிலைநாட்டுவார்கள் என்று நம்பியே தமிழ் மக்கள் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஆட்சிபீடம் ஏற்றியதாகவும் குறிப்பிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.சிவமோகன், எனினும் அரசாங்கம் நீதியை நிலைநாட்டும் தனது கடமையை புறந்தள்ளிவிட்டு கடந்த கால ஆட்சியாளர்களைப் போல் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை மூடிமறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கவலை வெளியிட்டார்.

No comments:

Post a Comment