June 23, 2016

தமிழர் பிரச்சினைக்கு வட, கிழக்கு இணைந்த சமஷ்டியே தீர்வு! - முதலமைச்சர்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, சமஷ்டி ஆட்சி முறையை அமுல்படுத்தினால் மாத்திரமே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

 
தென் பகுதியிலுள்ள தீவிர போக்குடையவர்களின் கண்ணோட்டத்தில், தமிழ் மக்களின் பிரச்னைகளை அரசாங்கம் அணுகக் கூடாது. யுத்தக்குற்ற விசாரணையில், சர்வதேச நீதிபதிகள் இடம்பெறாத எந்த பொறிமுறையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்காது.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment