June 22, 2016

பல கொலைகளுக்கு பயன்படுத்திய மர்ம வாகனம் ; அம்பலப்படுத்தினார் ரஞ்சன்!

கொலை உள்ளிட்ட பல மோசடிகளுக்கு உபயோகிக்கப்பட்டதாக நீதிமன்றத்தால் தேடச்சொன்னதாக கூறப்படும் வாகனமொன்றை பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே ஆகியோரால் இன்று ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது.


குறித்த வாகனம் கடந்த ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வசமே இருந்ததாகவும் ரஞ்சன் ராமநாயக்க இதன்போது தெரிவித்தார்.

மேலும், அச் சந்தர்ப்பத்தில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரி ஒருவருக்கு அழைப்பை மேற்கொண்ட அவர், புநு2034 என்ற இலக்கத் தகடுள்ள வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று வினவினய போது அதற்கு மறுமொழியாக குறித்த அதிகாரி இல்லை என பதிலளித்தார்.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆனந்த அளுத்கமகே இந்த வாகனமானது கொலை, கொள்ளை மற்றும் ஊழல் மோசடி போன்ற பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாகவும், இது குறித்து நாவலப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், குறித்த இலக்கத் தகடு கொண்ட வாகனத்தை தேடும் படி பொலிஸாருக்கு நீதிமன்றத்தால் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





No comments:

Post a Comment