June 22, 2016

முல்லைத்தீவில் நடந்த கோர சம்பவம்!

முல்லைத்தீவு, முறிகண்டிப் பகுதி புகையிரதக் கடவையில் இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அக்கராயன் பகுதியிலிருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம், அக்கராயன் முறிகண்டி பிரதான வீதியிலுள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்டபோது, யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, டிப்பர் வாகனம் கடும் சேதமடைந்ததுள்ளது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



No comments:

Post a Comment