கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹர நீதிமன்ற வளாகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வௌ்ளை நிற ஹைபிரிட் காரொன்றில் வந்த சிலர் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவத்தில் மரணமடைந்தவரின் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் 35 வயதுடையவர் என்றும் ரத்மலான பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும், நான்கு பேரை கொண்ட குழு மூலம் தாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டுள்ள நபர் ஹெரோயின் சம்பந்தமான வழக்கு தொடர்பாகவே நீதிமன்றத்திற்கு வருகை தந்த நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வௌ்ளை நிற ஹைபிரிட் காரொன்றில் வந்த சிலர் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவத்தில் மரணமடைந்தவரின் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் 35 வயதுடையவர் என்றும் ரத்மலான பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும், நான்கு பேரை கொண்ட குழு மூலம் தாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டுள்ள நபர் ஹெரோயின் சம்பந்தமான வழக்கு தொடர்பாகவே நீதிமன்றத்திற்கு வருகை தந்த நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment