June 29, 2016

இலங்கை அகதிகளை ஏற்க அவுஸ்திரேலிய மக்கள் விருப்பம்!

படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வருகின்ற இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகளை, தமது நாட்டில் குடியேற்றம் செய்ய வேண்டும் என்று அவுஸ்திரேலியர்களில் பலர் விரும்புவதாக ஒஸ்ட்ரேலியனின் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.


கருத்துக்கணிப்பின் போது 63 சதவீதமானவர்கள், படகு மூலம் பிரவேசிக்கின்றவர்களை அவுஸ்திரேலியாவில் குடியேற்ற விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

மானுஸ் மற்றும் நவுரு தீவு முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளை நியூசிலாந்தில் குடியேற்ற அவுஸ்திரேலிய இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்றும் மக்கள் யோசனைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment