June 25, 2016

‘பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு’ நூல் வெளியீடு!

பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான ஒரு வரலாற்றுப்பதிவுகளைக் கொண்ட நூல் இன்று (25) சனிக்கிழமை காலை மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

பதினெட்டு வருடங்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஓர் போராளியாக செயற்பட்டு தற்போது புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி வெற்றிச் செல்வி எழுதிய ஏழாவது நூலான பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான ஒரு வரலாற்றுப்பதிவுகளைக் கொண்ட  ‘ஆறிப்போன காயங்களின் வலி’ எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டது.

ஆசிரியை தனலெட்சுமி கிருஸ்துராஜன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,சிறப்பு விருந்தினராக மருத்துவ போராளி திருமதி தனேஸ்குமார் சத்தியபாமா,கௌரவ விருந்தினராக சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், முன்னாள் போராளிகள், எழுத்தாளர்கள், மதத்தலைவர்கள்,ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டு வெளியீடு செய்யப்பட்ட நூலினை பெற்றுக்கொண்டனர்.
குறித்த நூலின் வெளியீட்டுரையினை தீபச்செல்வன் ஆற்றினார். மதிப்பீட்டுரையினை கோகிலவானி அவர்களும், ஏற்புரையினை நூலாசிரியர் வெற்றிச் செல்வி நிகழ்த்தினர்.

குறித்த நூலானது முன்னாள் பெண் போராளியான வெற்றிச் செல்வி எழுதியதோடு, பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான ஒரு வரலாற்றுப்பதிவுகளைக் கொண்ட நூல் என்பதினால் குறித்த நூலில் என்ன எழுதி இருக்கின்றார்கள் என்பதனை அறிந்து கொள்ள புலனாய்வுத்துறையினர் பலர் நூல் வெளியீடு செய்யப்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய படசாலை மற்றும் நிகழ்வு இடம் பெற்ற மண்டபத்தினையும் சூழ்ந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment