June 25, 2016

சகல காணிகளையும் விடுவிப்பது சாத்தியமற்றது-பாதுகாப்பு செயலாளர் யாழில் தெரிவிப்பு!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கிழக்கில் பாதுகாப்புகளின் நிமித்தம் சகல காணிகளையும் விடுவிப்பது சாத்தியமற்றது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

 இன்று யாழ் காங்கேசன்துறையில் இடம்பெற்ற காணிவிடுவிப்பு நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முப்படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நாங்கள் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகின்றோம் இன்று காணிகள் விடுவிக்கப்பட்டதைப்போன்று இன்னும் சில தினங்களிலும் சில காணிகளை விடுவிக்கவுள்ளோம்.

 விடுவிக்கப்படுவதற்கு ஏதுவான காணிகளை அடையாளம் கண்டு அதன் தொடர்ச்சியாக அதை விடுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் இதற்கு நீண்டநாட்கள் ஆகாது என நான் நினைக்கின்றேன்.

  பாதுகாப்பின் நிமித்தம் சில காணிகளை விடுவிப்பது சாத்தியமற்று உள்ளது எத்தனை ஏக்கர் அவ்வாறு விடுவிக்கமூடியாமல்போகும் என்பது குறித்து இன்று என்னால் கூறமுடியாது அவ்வாறான காணிகளின் உரிமையாளர்களிற்கான இழப்பீடுகள் நிச்சயம் வழங்கப்படும்.

 யாழ் மாவட்டத்தில் ஒருகாலத்தில் 29ஆயிரம் ஏக்கர் காணிகள் பாதுகாப்பு தரப்பினரிம் இருந்தது ஆனால் அவற்றில் பெரும்பான்மையானவை  விடுவிக்கப்பட்டு மூவாயிரம் ஏக்கர் காணிகளே இன்று விடுவிக்கப்படவேண்டியுள்ளது எனவே பாதுகாப்பு தேவைகளை தவிர்த்து சகல காணிகளையும் விடுவிக்க நாம் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுப்போம் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment