June 27, 2016

மீண்டும் இலங்கையில் படகு கட்டும் தொழில்துறை!

இலங்கையில் படகு கட்டும் தொழில்துறை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அத்துறைசார்ந்த அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த கடலுணவுப் பொருட்களுக்கான தடை அண்மையில் நீக்கப்பட்டிருந்தது. அதனை அடுத்து மீண்டும் பிரித்தானியாவுக்கான கடலுணவு ஏற்றுமதிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மீண்டும் படகு கட்டும் தொழிற்துறைக்கான கேள்வி அதிகரிக்கும் என்பதால், இதனை மீள ஆரம்பிக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படுமாயின் அது, நாட்டின் கடற்தொழிற்துறை மற்றும் பொருளாதாரம் என்பவற்றில் சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகின்றது.

No comments:

Post a Comment