மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதி காணியொன்றில் இருந்து நேற்றிரவு பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொக்குவில் பொலிஸ் காவலரனுக்கு அருகில் உள்ள குறித்த காணியில் வீடு கட்டுவதற்கு குழிகள் தோண்டியபோது பைகளில் சுற்றப்பட்ட நிலையில் இந்த ஆயுதங்கள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்போது, ரி 56 துப்பாக்கிகள் நான்கு, மகசின்கள் எட்டு, ரி-56 துப்பாக்கிகளுக்கான ரவைகள் 210 என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு சென்ற கிழக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பதில் பொறுப்பதிகாரி அஜித் குணவர்த்தன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கொக்குவில் பொலிஸ் காவலரனுக்கு அருகில் உள்ள குறித்த காணியில் வீடு கட்டுவதற்கு குழிகள் தோண்டியபோது பைகளில் சுற்றப்பட்ட நிலையில் இந்த ஆயுதங்கள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்போது, ரி 56 துப்பாக்கிகள் நான்கு, மகசின்கள் எட்டு, ரி-56 துப்பாக்கிகளுக்கான ரவைகள் 210 என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு சென்ற கிழக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பதில் பொறுப்பதிகாரி அஜித் குணவர்த்தன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
No comments:
Post a Comment