June 29, 2016

முல்லைத்தீவில் 524 ஏக்கர் நிலத்தை கோருகின்றது இராணுவம்!

முல்லைத்திவு மாவட்டத்தில் இரானுவத்தின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் பண்ணை அமைப்பதற்காக 524 ஏக்கர் அரசகாணியை வழங்குமாறு; சிவில் பாகாப்புது; திணைக்களத்தினரால் முல்லைத்திவு மாவட்டச் செயலகத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

மாவட்டத்தில் ஏற்கனவேபல இடங்களிலும் பாதுகாப்புப் படையினரும் படைகளின் சிவில் பாதுகாப்புப் படையினரும் அரசமற்றுமு; தனியார் காணிகளை பெருமளவில் ஆக்கிரமித்தும் அபகரித்தும் வைத்திருக்கின்ற அதேவேளையில் தற்பொது பண்ணை அமைப்பதற்காக மேலும் காணிகளை வழங்க வேண்டுமென சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யுத்தத்திற்குப் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களிற்குச் சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் அதேநேரம் அரசகாணிகளையும் படையினர் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர். அத்தோடு அந்த மாவட்டத்தில் சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் காணிகளை அடாத்தாகப் படித்தும் வருகின்றதாகக் குற்றச்சாட்டக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் மாவட்டத்தில் இரானுவத்தினரின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் பண்ணை அமைப்பதற்காக மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் ஊடாக சிவில் பாதுகாப்புது; திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தற்போது பரிசீலனைக்காக மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.
அதாவது பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுவில் அனுமதி பெறப்பட வேண்டிய காணிகளின் விபரம் எனும் தலைப்பில் பாதுகாப்பு படைகளுக்கான பாரதீனப்படுத்துவதற்காக வழங்கப்படவுள்ள காணிகளின் விபரம் எனக் குறிப்பிட்டு பதின் மூன்று இடங்களில் இவ்வாறு காணிகளை வழங்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இதற்கமைய பதினொரு இடங்களில் பண்ணை அமைப்பதற்காகவுமு; ஏனைய இரண்டு இடங்களில் இலவச கல்வ pநிலையங்களை அமைப்பதற்காகவும் காணிகளை வழங்குவதற்கு மேற்படி திணைக்களத்தினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அதாவது முல்லைத்தீவுசிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் பண்ணை அமைப்பதற்காக விஸ்வமடு கிழக்கில் 65 ஏக்கர் அரச காணி, விஸ்வமடு மேற்கில் 25 ஏக்கர் அரச காணி, வேணாவில் 215 ஏக்கர் அரசகாணி, புதுக்குடியிருப்பு மேற்கு 15 ஏக்கர் அரச காணி, உடயார் கட்டுவடக்கு 9 ஏக்கர் அரசகாணி, சுதந்திரபுரம் 8 ஏக்கர் அரசகாணி, உடையார் கட்டுதெற்கு 75 ஏக்கர் அரசகாணி, உடையார் கட்டுதெற்கு 10ஏக்கர் அரசகாணி, தேவிபுரம் 100 ஏக்கர் அரசகாணி, தேராவில் 5 ஏக்கர் அரசகாணி, வள்ளிபுனம் 2 ஏக்கர் அரசகாணிகள் எனபதினொரு இடங்களில் கோரப்பட்டுள்ளது.
அதேநேரம் மேலும் இரண்டு இடங்களில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினரால் இலவச கல்வி நிலையம் அமைப்பதற்காகவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. அதாவது உடையார் கட்டுவடக்கு 2 ஏக்கர் அரசகாணி,உடையார் கட்டுதெற்கு 1ஃ1.4 ஒன்றைக் கால் ஏக்கர் என மொத்தமாக முன்றைகால் ஏக்கர் கல்விநிலையம் அமைப்பதற்காகக கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மாவட்டத்தில் சொந்தக் காணிகளில் குடியமரமுடியாமல் தற்போதும் மக்கள் இடம்பெயரந்து இருக்கின்றனர். அத்தோடு மேலும் பலர் இன்றைக்கும் காணிகள் இல்லாது வாழந்து வருகின்றனர். இவ்வாறான நிலைமைகளிலேயே அந்த மாவட்டத்தில் காணிகளை சிங்கள் முஸ்லிம் மக்கள் ஆக்கிரமித்து வருகின்ற அதேவேளையில் படையினரும் ஆக்கிரமித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனொரு அங்கமாகவே மாவட்டத்தில் மேலும் 500 இற்கும் மேற்பட்ட ஏக்கர் அரசகாணியைக் கோரியிருக்கின்றமைகுறிப்பிடத்தக்கது.
இதற்கு அந்த மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்ற அதேவேளையில் இதற்கான அனுமதிகளை மறைமுகமாக வழங்குவதற்குரிய நடவடிக்கைகளும் திரைமறைவில் சில அரசியல்வாதிகளின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment