June 22, 2016

44 ஈழத் தமிழர்களை காப்பாற்றுக ஐ.நா. அகதிகள் ஆணையருக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள்!

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
“தங்களுடைய சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில் தமிழ்நாட்டில்
தங்கியிருந்தால் எதிர்காலம் இல்லை எனக் கருதி, படகின் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு செல்லுவதற்குப் புறப்பட்ட ஈழத்தமிழர்கள் 44 பேர் இந்தோனேசியா அருகே கரை ஒதுங்க நேர்ந்து பெரும் போராட்டத்திற்கு இடையே அங்கு இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், இந்தோனேசிய அரசு அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதில் தீவிரமாக இருக்கிறது. எனவே, ஐ.நா. அகதிகள் ஆணையர் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு 44 ஈழத் தமிழர்களையும் காப்பாற்றுவதுடன் அவர்களுக்கு அடைக்கலம் தருகிற ஒரு நாட்டிற்கு அவர்களைப் பத்திரமாக அனுப்பிவைத்து உதவ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்
அன்புடன்
பழ.நெடுமாறன்

No comments:

Post a Comment