September 14, 2015

மாணவன் துஷ்பிரயோகம்; அதிர்ச்சித் தகவல்!

உஹன பொலிஸ் பிரிவிலுள்ள வீரகொடையைச் சேர்ந்த மாணவன் ஒருவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உஹன பொலிஸார் தெரிவித்தனர்.

உயர் வகுப்பு மாணவனான இவர் கடந்த வெள்ளிக்கிழமை அம்பாறை மிஹிந்தபுரவிலுள்ள பிரத்தியேக வகுப்புக்குச் சென்று கொண்டிருக்கும்போது குறித்த சந்தேக நபர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதாக மேற்படி மாணவனின் தந்தை மாபாராஜபக்ஷ சமன் முதியான்ஸலாகே என்பவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவன் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றச் செயலைப் புரிந்ததாக முறையிடப்பட்டுள்ள சந்தேக நபர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment