தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.அரசியல் கைதிகளாக
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தையர்களை விடுதலை செய்ய கோரி இன்று யாழில் சிறுவர்கள் போராட்டம் நடாத்தி இருந்தனர்.அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாதமைக்கான பிரதான காரணம் அவர்களுடைய வாழ்கையை அவர்களுடைய குடும்பங்களின் வாழ்கையை அழிக்க வேண்டும் என அரசாங்கம் திட்ட மிட்டு உள்ளமையே ஆகும்.தடுத்து வைக்கப்பட்டுள்ள பெருமளவானவர்கள் மீது குற்றசாட்டுகள் இல்லாத போதிலும் அவர்கள் மீது பொய் குற்றசாட்டு சுமத்தி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
பலர் வழக்குகள் பதிய படாமலும் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் கடந்த காலத்தில் பயங்கரவாத தடுப்பு சட்டம் அவசரகால தடுப்பு சட்டம் என்பவற்றை பயன்படுத்தி பல அப்பாவி தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுடைய விடுதலைக்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை.ஆகும் என தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தையர்களை விடுதலை செய்ய கோரி இன்று யாழில் சிறுவர்கள் போராட்டம் நடாத்தி இருந்தனர்.அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாதமைக்கான பிரதான காரணம் அவர்களுடைய வாழ்கையை அவர்களுடைய குடும்பங்களின் வாழ்கையை அழிக்க வேண்டும் என அரசாங்கம் திட்ட மிட்டு உள்ளமையே ஆகும்.தடுத்து வைக்கப்பட்டுள்ள பெருமளவானவர்கள் மீது குற்றசாட்டுகள் இல்லாத போதிலும் அவர்கள் மீது பொய் குற்றசாட்டு சுமத்தி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
பலர் வழக்குகள் பதிய படாமலும் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் கடந்த காலத்தில் பயங்கரவாத தடுப்பு சட்டம் அவசரகால தடுப்பு சட்டம் என்பவற்றை பயன்படுத்தி பல அப்பாவி தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுடைய விடுதலைக்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை.ஆகும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment