September 26, 2015

தேசியத் தலைவர் பிரபாரனின் படத்தை சாட்சியாக வைத்து நடந்த திருமணம்!(படங்கள் இணைப்பு)

தேசியத் தலைவர்  பிரபாரனின் படத்தை சாட்சியாக வைத்து, படத்தின் முன்பாக  உறுதியெடுத்து இந்த திருமணம் நடந்தது. புலம்பெயர் நாடொன்றில் இந்த திருமணம்  நடந்தது குறிப்பிடத்தக்கது.சிறிலங்கா சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழ
ந்து நிற்கின்றது. 67ஆவது சுதந்திர தினத்தை சிறிலங்கா கொண்டாடுகின்ற போதும்  ஈழத்தமிழர்கள் இன்றும் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர்.புலம்பெயர் தமிழர்களின் கைகளில் முக்கியமான பணி ஒன்று தமிழீழ தாயகத்தில் வாழும் எங்கள் உறவுகளால் தரப்பட்டிருக்கிறது. நாம் ஒவ்வொரு தமிழனும்  எமக்காய் குரல் கொடுக்கின்றபோதுதான் எமது தேசத்தின் விடுதலை சாத்தியமாகும் . “விண்மட்டும் புகழுற்று நின்ற தமிழன் விறைப்பற்று வீழ நாம் விட்டுவிடக்கூடாது.”
எம் இனத்தை முழுமையாகத் துடைத்தழிப்பதற்காய் எத்தனையோ வஞ்சகங்களையெல்லாம் சிங்களம் தயங்காமல் செய்கின்றது.
தமிழனின் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் எமது பலம் தான் உறவுகளின் உயிரின் இருப்பை நிர்ணயிக்கப்போகின்றது. எத்தனையோ இடர் மிகுந்த பொழுதுகளிலெல்லாம் எம்மை எமது போராட்டம் தான் காப்பாற்றி வந்திருக்கின்றது.

No comments:

Post a Comment