September 30, 2015

தடுப்பில் இருக்கும் எமது அப்பாவைத் திருப்பித் தாருங்கள்! யாழில் சிறுவர்கள் ஆர்ப்பாட்டம்!(படங்கள் இணைப்பு)

வாழ்வின் ஒளியை தேடும் சிறுவர்களுக்கான ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் தமிழ் அரசியல் கைதிகளின் பிள்ளைகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளதுடன், வடமாகாண முதலமைச்சருக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளனர்.

இன்றைய தினம் காலை 11 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் மற்றும் பிள்ளைகள் கலந்து கொண்டனர்.
மாவட்டச் செயலகம் முன்பாக தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டம் பிரதான வீதி வழியாக நகர்ந்து முதலமைச்சர் அலுவலகத்தை அடைந்து, அங்கு அரசியல் கைதிகளின் குடும்பங்கள் மற்றும் பிள்ளைகள் முதலமைச்சரிடம் மகஜர் கையளித்தனர்.
இந்த மகஜரில் தங்கள் தந்தையரை நீண்டகாலம் தாம் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்ப்பதாகவும் ஜனாதிபதி மாமா எங்கள் தந்தையரை விடுதலை செய்ய வேண்டும் என உருக்கமான மகஜரினை கையளித்துள்ளனர்.







No comments:

Post a Comment